இலங்கை வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கௌரவம்


(சிவம்)

இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மேற்தரக் கிளையில் சேவை செய்து ஓய்வு பெற்ற முகாமையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை வங்கியில் இடம்பெற்றது.

மேற்தரக் கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் எம். ஐ. நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட விசேட சுவர்க் கடிகாரத்தை  ஓய்வூதியச் சங்கத்தின் தலைவர் கே. ஜெயநாதன் திரை நீக்கி திறந்து வைத்தார்.

ஓய்வூதியச் சங்கத்தின் செயலாளர் எஸ். சிவநாயகம், பொருளாளர், உதவி முகாமையாளர் கே. சாமித்தம்பி, ஓய்வு பெற்ற முகாமையாளர்களட, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை வங்கியில் தற்பொது பென்சன் திட்டத்தில் 13,000 பேர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.