மகாபொல மற்றும் பேசரி புலமைப் பரிசில் தொகைகளை அதிகரிக்குமாறு கோரி பல்கலைக் கழக மாணவர்களால் கையெழுத்துச் சமர்


(சிவம்)

மகாபொல மற்றும் பேசரி புலமைப் பரிசில்களை ரூபாய் 2500 இல் இருந்து ரூபாய் 5000 வரை உயர்த்துமாறு கோரி அனைத்து பல்கலைக் கழக மாணவர் பேரவையினால் மட்டக்களப்பு மருத்துவ பீட வளாகத்தினுள் இன்று கையொப்பமிடும்; நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வாழ்க்கைச் செலவு மற்றும் கல்விச் செலவுகள் அதிகரிப்புக்கேற்ப புலமைப்பரிசில் தொகையும் அதிகரிக்கவேன்டும் என்பதை வலியுறுத்தியும்,

இக் கொடுப்பனவு முதல் மாதத்திலிருந்து கொடுக்கப்படாமல் ஒரு வருடத்தின் பின்பே கிடைப்பதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர் உரிய காலத்தில் வழங்கும்படியும்,

குறித்த மாதத்தின் கொடுப்பனவை மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முற்பகுதியிலோ வழங்குதல்,

புலமைப்பரிசிலைப் பெறுவதற்காக பெற்றோரின் வருமான எல்லை 10 வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை இதை மாற்றுமாறும்,

புலமைப்பரிசில் கொடுப்பனவிற்காக பெற்றோரின் வருமான தொகையை அதிகரித்தல் மற்றும் பரிசிலுக்கு தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் முதலிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாணவர்கள் அனைத்து பல்கலைக் கழக மாணவர் பேரவையின் இணைப்பாளர் நாஜித இந்திக்கவிடம் கையளித்தாகத் தெரிவித்தனர்.