மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

(வரதன் )
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்  தொடர்பில் ஆராயும் கூட்டம் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

இதன்போது வரட்சி காரணமாக தற்போதுள்ள நிலைமை தொடர்பிலும் இதற்கான எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் தன்மை, எதிர்காலத்தில் வறட்சிப் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் உரிய திணைக்களங்களிடமிருந்து ஆலோசனைகளும் திட்ட முன்மொழிவுகளும் பெறும் வகையிலான விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பொருளாரதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்  மாயாதுன்ன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்