ஆபாச படங்கள் அடங்கிய இறுவட்டுக்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது

ஆபாச படங்கள் அடங்கிய இறுவட்டுக்களை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் ஒருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

பொத்துவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ஆபாச படங்கள் அடங்கிய 100 க்கும் மேற்பட்ட இறுவட்டுக்கள், கணனி இயந்திரங்கள், டிஜிட்டல் கமரா என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ் இளைஞனை பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.