துறைநீலாவணையில் மின்னொழுக்கினால் வீடு தீக்கரை

நடனம்-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 5 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மின்னொழுக்கு ஏற்பட்டதால்   வீட்டின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது
 இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் வெள்ளிக்கிழமை இரவு  7 மணியளவில் இவ்வீட்டின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது அப்போது அயலவா்களின் உவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் வீட்டிற்குள் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமாகியிருப்பதுடன் இதுதொடர்பாக களுவாஞ்சிக்குடிப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.