மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயத்தியத்தில் சுற்றாடல் படையணி

(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயத்தியாலயமானது தற்போது பற்பல வழிகளில் விருத்தியடைந்து வருகின்றது. மாணவர்களின் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளில் பல முன்னேற்றங்களையும் கண்டு வருகின்றது. 

அந்தவகையில் இப்பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த சுற்றாடல் படையணி மாணவியர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு முதல் முறையாக பாடசாலை அதிபர் திருமதி.த.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.ர.பாஸ்கரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன் போது பாடசாலை சுற்றாடல் படையணியில் அங்கம் வகிக்கும் மாணவிகளுக்கு அதிதிகளினால் சின்னங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.