மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயத்தில் சாரணர் அமைப்பு ஆரம்பிப்பு

(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புற பாடசாலைகளில் இயங்கும் சாரணர் அமைப்பு என்ற குறையை நிவர்த்தி செய்யும் முகமாக மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயத்தில் சாரணர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முதன் முறையாக சாரண மாணவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.த.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அததியாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் பொன்.ஆனந்தராஜா, பாடசாலை ஆசிரியர் மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினாலும், ஆசிரியர்களாலும் சாரண மாணவியர்களுக்கு சின்னங்கள் சூட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.