தென்னந்தோட்டத்தில் பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம்


அக்கரைப்பற்று ஆலிம் நகர் மோகினிபுரம் பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றில் உள்ள வீடொன்றில் இருந்த 41 வயது குடும்ப பெண் கடந்த வெள்ளிக்கிழமை (21) பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டார்.

இரவு 9.00 மணியளவில் இருவர் மது போதையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த பெண் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது மட்டக்களப்பு மாவட்டத்தை  சேர்ந்த பெண் தனது கணவருடன் தொழிலுக்காக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரது தென்னங்காணியில் வசித்து வந்தார்.

சம்பவ தினம் இரவு ஆலையடிவேம்பைச் சேர்ந்த இருவர் தென்னங்காணியில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு வந்து கணவன் இல்லாத சமயத்தை சாதகமாக பயன்படுத்தி   பெண்ணை   பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் கூக்குரல் இட்டு கத்திய போது அயலவர்கள் அங்கு வர இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸார் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.