முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் காயம்

அக்கரைப்பற்று- பொத்துவில் பிரதான வீதியின் காஞ்சிரங்குடா பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற  முச்சக்கரவண்டி விபத்தில் அதன் சாரதி காயங்களுடன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியானது காஞ்சிரங்குடா பிரதான வீதி வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி அதன் உரிமையாளர் என்றும் இவர் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்தவருமென தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.