போக்குவரத்து பொலிஸார் மீது மோதிய பஸ் ! பொலிஸார் இருவர் காயம்

திருகோணமலை, கண்டி வீதி – 4 ஆம் மைல் கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(24) இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து பிரிவு பொலிஸார் இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை. பொது வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிகளுடன்  பயணித்தே தனியார் பஸ்ஸே இவர்கள் மீது மோதி உள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில், திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் கடமைபுரியும் புஸ்பகுமார,   பண்டார ஆகியோர் காயமடைந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து  குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.