நீர் விநியோகிக்கும் வாகனங்கள் நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

( சுரேஷ் )
ஏறாவூர் பற்று வேள்ட் விசன் பிராந்திய அபிவிருத்தி திட்ட அமைப்பின் ஏற்பாட்டில் நீர் வழங்கள் செயற்திட்டத்தின் கீழ் கொடுவாமடு தொடக்கம் புல்லுமலை வரையிலான பிரதேசத்திற்குட்பட்ட மக்களின் நீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக அமைப்பின் 5 லட்சம் ரூபா நிதியுதவியின் கீழ் நீர் வினியோகிக்கும் வாகனங்கள் மற்றும் நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் திட்ட இணைப்பாளர் என்.அமலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பிரதேச சபையின் நீர் வழங்களுக்கான உத்தியோகத்தர் திருமதி.கே. ஜோன்பிள்ளை முகாமைத்துவ உத்தியோகத்தர் வீ.பற்குணம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இவ் நீர் வழங்களுக்கான வசதிகளையும் தாங்கிகளையும் வேள்ட் விசன் அமைப்பு வழங்கியுள்ளமையினால் சுமார் 350க்கு மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைகின்றனர்.