புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்தில் 105 மாணவர்கள் சித்தி

இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் 105 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தர்.

வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின்படி கோறளைப்பற்று கல்வி கோட்டத்தில் 52 மாணவர்களும், ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் 50 மாணவர்களும், கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் 3 மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர்.

செங்கலடி விவேகானந்த வித்தியாலய மாணவன் சுதாகரன் அனேஜன் 186 பெற்று வலயத்தில் முதலிடத்தையும் மட்டக்களகப்பு மாவட்டத்தில் 8ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லுரியில் 29 மாணவர்களும், செங்கலடி மத்திய கல்லூரியில் 17 மாணவர்களும், வந்தாறுமூலை மத்திய மாகா வித்தியாத்தில் 11 மாணவர்களும், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 11 மாணவர்களும், கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் 7 மாணவர்களும், செங்கலடி விவேகானந்த வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும்; அவர் கூறினார்.