இலங்கை மென்பந்து கிரிக்கட் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும்
நடாத்தப்பட்டுவரும் இருபதிற்கு இருபது மென்பந்து கிரிக்கட்
சுற்றுப்போட்டியின் மட்டக்களப்பு மாவட்டப் போட்டிகள் கடந்த 14.09.2014ம்
திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரையம்பதி பொது விளையாட்டு மைதானத்தில்
நடாத்தப்பட்டன.
மேற்படி சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதி ரீதியாக போட்டிகள் நடாத்தப்பட்டு அதிலிருந்து தெரிவான அணிகளுக்கிடையில் மாவட்ட மட்டப் போட்டி நடாத்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் கீழ் போட்டியிட்ட ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டதோடு பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் கீழ் போட்டியிட்ட களுவாஞ்சிக்குடி உதயம் விளையாட்டுக் கழகத்தினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். குறித்த போட்டிகளுக்கு இலங்கை மென்பந்து சம்மேளன நடுவர்கள் நடுவகம் வகித்தனர்.
மேலும் மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் கிழக்கு மாகாண மட்ட போட்டியில் கலந்துகொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் , முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் தேசிய மட்டத்தில் நடாத்தப்படவுள்ள ரெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
மேற்படி மாவட்ட மட்ட சுற்றுப்Nபுhட்டியானது மட்டக்களப்பு மாவட்ட மென்பந்து கிரிக்கட் சங்க தலைவர் திரு.வே.ஈஸ்பரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இலங்கை மென்பந்து கிரிக்கட் சம்மேளனத்தின் நிறைவேற்று செயலாளர் திரு.குமாரநாயக அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதி ரீதியாக போட்டிகள் நடாத்தப்பட்டு அதிலிருந்து தெரிவான அணிகளுக்கிடையில் மாவட்ட மட்டப் போட்டி நடாத்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் கீழ் போட்டியிட்ட ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டதோடு பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் கீழ் போட்டியிட்ட களுவாஞ்சிக்குடி உதயம் விளையாட்டுக் கழகத்தினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். குறித்த போட்டிகளுக்கு இலங்கை மென்பந்து சம்மேளன நடுவர்கள் நடுவகம் வகித்தனர்.
மேலும் மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் கிழக்கு மாகாண மட்ட போட்டியில் கலந்துகொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் , முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் தேசிய மட்டத்தில் நடாத்தப்படவுள்ள ரெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
மேற்படி மாவட்ட மட்ட சுற்றுப்Nபுhட்டியானது மட்டக்களப்பு மாவட்ட மென்பந்து கிரிக்கட் சங்க தலைவர் திரு.வே.ஈஸ்பரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இலங்கை மென்பந்து கிரிக்கட் சம்மேளனத்தின் நிறைவேற்று செயலாளர் திரு.குமாரநாயக அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.