மட்டக்களப்பு வாவியில் சீ பிளேன் விபத்து


(சிவம்)

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இன்று வியாழக்கிழமை (18) பயணிகளை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு வந்த சீ பிளேன் இறங்கு மேடைக்கு அப்பால் சிறு விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆற்றினுள் இறங்கிய விமானம் பாரிய கல்லில் அடிபட்டு நின்றதினால் மீனவர்களின் உதவியுடன் விமானத்தை மேடைக்கு இழுத்து வந்ததாக மேலும் தெரிவித்தனர்.


இன்றிலிருந்து  ஆரம்பமான சினமன் எயார் இச்சேவை மட்டக்களப்பு விமான நிலைய புனர்நிர்மாண வேலைகள் பூர்த்தியாக மட்டும்  இடம்பெறவுள்ளதாக விமானி பிரையின் முள்மேரோ தெரிவித்தார்.

ஏழுபேர் பயணிக்கத்தக்க இவ் விமானத்தில் ஒருவழிப் பாதைக்கு ரூபாய் 27,000 எனவும் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழைமகளpல் இச்சேவைகள் இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாரிய பழுதுகள் எதுவுமற்ற நிலையில் விமானம் மீண்டும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.