யானைகளை துரத்தும் கருவி பழுகாமத்தைச் சேர்ந்தவரால் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தொல்லை பாரிய தொல்லையாக உள்ள  நிலையில் மட்டக்களப்பு, பழுகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட, திருப்பெருந்துறை மட்டக்களப்பில் வசிக்கின்ற சோமசூரியம் திருமாறன் என்பவர்  யானைகளை துரத்;தக்கூடிய கருவியை  தயாரித்துள்ளார்.

இவரது இந்தக் கருவி தயாரிப்புக்கு  மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் தோவேஸ்வரன் மிதுறாஸனும் உதவிவருகின்றார்.

தன்னியக்கமாக பாரிய ஒலி, ஒளியை எழுப்பி யானைகளை துரத்தும் வகையில் மேற்படி கருவி  தயாரிக்கப்பட்டுள்ளது. சூரியசக்தியைக் கொண்டு இயங்கும் மேற்படி கருவி மின்சாரம் இல்லாத இடத்திலும் பாவிக்கக்கூடியது.

 மேற்படி கருவியை வன இலாக அதிகாரிகளின் உதவியுடன் சோதனை செய்த பின்னர் தாம் இதை அறிமுகப்படுத்த உள்ளதாக திருமாறன் தெரிவித்தார்.