உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தத்தினாலும் பிறப்பினாலும் பாதிக்கப்பட்ட வலது குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி நிகழ்வு ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்ரர் நெசனல் நிறுவனத்தின் நிதியுதவியில் கமிட் அமைப்பின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல் தொடர்பான செயற்திட்டத்தின் ஒரு பகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி கமிட் அமைப்பின் வாழ்வாதார நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் மற்றும் எஸ்.மேரீயன் தலைமையில் சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று முன்தினம் ஆரப்பமாகி நடைபெற்றது.

இப்பயிற்சி போது உள ஆற்றுப்படுத்தில் மற்றும் தொழில் வழிகாட்டல் உளவளத்துறைகளின் பயிற்றுவிப்பாளர்கள் அ.ஜெயநாதன் மற்றும் ரீ.விஸ்வஜிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கையின் முன்னேற வேண்டிய அக புற வளங்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் எவ்வாரான சவால்களை எதிர்நோக்கி வெற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி பயிற்றுவிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.