சித்தாண்டியில் வீடு தீக்கிரை

(நித்தி) ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டியில் வீடு ஒன்று இனந்தெரியாத நபரினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

நேற்று இரவு வெள்ளிக்கிழமை (26) அன்று சித்தாண்டி-3, பத்தினிசாமி வீதியிலுள்ள சண்முகம் சின்னத்தங்கம் என்பவரின் வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இடத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் முறைப்பாடு கொடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

இச் சம்பவத்தினால் வீட்டின் கூரை மற்றும் வீட்டில் அடங்கங்கூடிய பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்யும் விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.