மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் நிகழ்வு

(நடனம்)
பாடசாலை மாணவர்களுக்கு  பசும்பால் வழங்கும் தேசியத்திட்டத்தில் சம்மாந்துறை கல்விவலயப் பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் நிகழ்வு  முதலாம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
 வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 1-5 வரையான மாணவர்களுக்கு அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது  .சம்மாந்துறை வலயத்தின் ஆசிரி ஆலோசகர் எஸ்.சங்கரப்பிள்ளை பிரதி அதிபர் என்.வன்னியசிங்கம் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்