கொய்க்கா செயற்திட்டத்தின் மேற்பார்வையும் கண்காட்சி நிகழ்வும்

கொரிய நாட்டின் நிதியுதவியின் கொய்க்கா செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சின் மேன்பாட்டிற்கான நோக்கில் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கான முன்னேற்ற செயற்பாடுகளை செய்து வருகின்றது.

அதன்படி கொய்க்கா செயற்த்திட்டத்தின் பிரதிநிதிகளின் மேற்பார்மை நிகழ்வும் மட்டக்களப்பு சென்.ஜேசப் வாஸ் வித்தியாலயத்தின் கண்காட்சி நிகழ்வும் நேற்று முன்தினம் பாடசாலையில் பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் அதிபர் எம்.ஜ.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர் எஸ்.குருகுலசிங்கம் கொய்க்கா செயற்திட்டத்தின் கிழக்கு மாகாணத்தின் உத்தியோகத்தர் எம்.நிபால் மாவட்ட இணைப்பாளர் அ.ஜெயநாதன் மற்றும் மாவட்டத்தின் சர்வமத குருமார்கள் அத்துடன் மாணவர்களது பெற்றோர்கள் பலருர் கலந்து கொண்டனர்.

அதன் போது சென்.ஜேசப் வாஸ் வித்தியாலயத்தின் மாணவர்களினால் வடிவமைக்கப்பட்ட கைப்பணிப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.