போரதீவுப்பற்று கல்வி கோட்ட அதிபர்கள் சங்கத்தினால் சேவைநலன் பாராட்டுவிழா.

(பழுவூரான்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுபற்றுஅதிபர்கள் சங்கத்தினால் சேவைநலன் பாராட்டு விழா நேற்று 17.09.2014  வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மண்டபத்தில்போரதீவுபற்று கல்விக் கோட்ட பணிப்பாளர் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் ந.புள்ளநாயகம் அவர்களும், பி.கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவர்களும், மற்றும் பல வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளும் கலந்துசிறப்பித்தனர்.
சேவையில் இருந்து ஓய்வுபெறவிருக்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் - திட்டமிடல் த.நித்தியானந்தம் அவர்களுக்கும், திக்கோடை கணேஷா வித்தியாலய அதிபர் ம.கங்காதரன் அவர்களுக்கும், சின்னவத்தை அ.த.க.பாடசாலை அதிபர் எஸ்.மனோகரன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கல்வி நலன்கருதி உலக தரிசன நிறுவனம் தேசிய கல்வி நிறுவகத்துடனும் டயலொக் நிறுவனத்தினருடனும் இணைந்து  LED TV, DVD PLAYER  சில பாடசாலைகளுக்கு உலக தரிசன நிறுவன திட்ட முகாமையாளர் ஜெயக்குமார் அவர்களினால் வழங்கப்பட்டது.