குடிநீர் வழங்க கொடுக்கப்பட்ட தாங்கிகளை வீதி வேலைக்கு வாடகைக்கு விட்ட செங்கலடி பிரதேச சபை

ஏறாவவூர்ப்பற்று பிரதேசத்தில் வரட்சியால் பாதிக்கபட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நீர் தாங்கியை ஏறாவவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபை வீதி புனரமைப்புக்காக வாடகைக்குவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பல கிராமங்களில் தற்போது கடும் வரட்சியான காலநிலை நிலவிரும் நிலையில் அப்பிரதேச மக்கள் பாரிய குடிநீர் தட்டுபாட்டினை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு செங்கலடி பிரதேச செயலகத்தினால் குடிநீர் வழங்குவதற்கென நீர் தாங்கிகள் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்றினை உறுகாமம் பிரதேசத்தில் வீதி புனரமைப்பு செய்பவர்களுக்கு வாடகை;கு பிரதேச சபை வழங்கியுள்ளது.

இதனால் காரணமாக குறித்த பிரதேச பொதுமக்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குகினறனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகளினால் மாவட்ட உள்ளுராட்சி உதவி; ஆணையாளர் கே.சித்திரவேல் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.