எதிர்வரும் சனிக்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமசேவை பிரிவுகளில் ஒரே நாளில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம்

(படுவான் பாலகன்) உக்டா அமைப்பின் ஏற்பாட்டில் டெங்கு நோய் அற்ற சமூகத்தை உருவாக்கும் பொருட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 24கிராமசேவையாளர் பிரிவிலும் எதிர்வரும் 20.09.2014ம் திகதி சனிக்கிழமை காலை 08.00மணிக்கு ஒரு நேரத்தில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அமைப்பின் தலைவர் திரு.இ.குகநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர்கள், உக்டா உபகுழு அங்கத்தவர்கள் திட்ட ஊக்குவிப்பாளர்கள், பாலர்பாடசாலை ஆசிரியர்கள், உக்டா இளைஞர் குழுவினர், கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளதுடன் இதில் கலந்து கொள்ளவிரும்பும் அனைத்து பொதுமக்களும் அன்றைய வருகை தந்து இணைந்து கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.