மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்வு

(படுவான் பாலகன்) வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சஹன அருண கடன் திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்வு இன்று(01) திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை சமூதாய அடிப்படை வங்கியில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தனம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு 236 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன் அதில் இன்று 133பேருக்கு கடன் வழங்கப்பட்டதுடன் 07பேருக்கு நுகர்கடனும் வழங்கப்பட்டது. இதில் ரூ5000 தொடக்கம் ரூ 50000 வரை 4வீத வட்டியுடன் ஒரு வருடத்த்pன் பின்பு 24 தவணைகளில் செலுத்த முடியும்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், பிரதி அமைச்சரின் பிரதேச இணைப்பு தலைவர் திரு.த.பேரின்பராசா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.