மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்


(படுவான் பாலகன் சிறிகரன்) உக்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவல் உள்ள 24கிராமசேவகப்பிரிவிலும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று(20) சனிக்கிழமை காலை 08.00மணி தொடக்கம் பி.ப.12.30மணி வரை நடைபெற்றது.
இதன் போது அடுத்த டெங்குவின் பலி நீங்களா? எனும் கையேடும் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் டெங்கு பெருகும் இடங்களும் அழிக்கப்பட்டது.


இதில் பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஸன் திட்ட முகாமையாளர் திரு.பு.து.அனுராஜ் கிராமசேவை உத்தியோகத்தர்கள், உக்டா நிறுவன உத்தியோகத்தர்கள், உபகுழு அங்கத்தவர்கள், கிராம அமைப்புக்களின் அங்கத்தவர்கள், இளைஞர்கள்  பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்