பாலைநகரில் மக்கள்நடமாடும்சேவை


-நாவலடிகாமிலா-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாலைநகர் ஹிஸ்புல்லாஹ்வித்தியாலயத்தில் சனிக்கிழமை (30) மக்கள் நடமாடும்சேவை நடைபெற்றது.

இதில் வாழைச்சேனை பொலிஸ் அதிகாரி  திப்புட்டமுனி, சமூகசேவை அமைச்சின் செயலாலர் நளீர் , மயிலங்கரச்சி விகாராதிபதி, வாழைச்சேனை பொலிஸ் பொதுசன உத்தியோகத்தர்கள், தியாவட்டவான் மாதர் சங்கத்தலைவி ஆயிஷா, பாடசாலைஅதிபர் புகாரி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்,செயலாளர் ஆகியோர் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம் விழிப்புணர்வு கருத்தரங்கு, பொலிஸ்முறைப்பாட்டு பதிவு பிரதி வழங்கள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டது