வான்வெளியில் பிரகாசிக்கும் மர்ம ஒளி தொடர்பில் மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை

(Uk batti, prince)

கல்முனை தொடக்கம் களுவாஞ்சிக்குடி வரையிலான வான்பரப்பில் இன்று 25.09.2014 வியாழக்கிழமை மாலை தொடக்கம் அரைவட்ட பாதையில் மேகம் போன்ற ஒளி அசைவொன்று தெரிவதனை அவதானித்த மக்கள் அச்சத்துடன் வீதிகளில் நடமாடியதனை அவதானிக்க முடிந்தது.

இவ்விடையம் தொடர்பாக எமது இணையத்தள ஊடகவியலாளர் மிக விரைவாக ஆராய்ந்து சம்பவத்தினை தோற்றிவிக்கும் இடத்திற்கு நேரில் சென்று உண்மைத்தன்மையினை சற்று முன்னர் எமக்கு ஊர்ஜிதப்படுத்தியிருந்தார்.

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் புதிதாக திறந்துவைக்கப்பட்ட ( ASLAM BIG MART ) எனும் ஆடை விற்பனை காட்சியறையில் பொருத்தப்பட்டுள்ள விசேட மின்விளக்கின் ஒளியே இவ்வாறாக காட்சியளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.