அம்பிளாந்துறையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரூந்துச்சேவை ஆரம்பம்

(அரசையூர் ஸ்ரீகரன்)


பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  அம்பிளாந்துறை
கிராமத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சேவை
நேற்று அதாவது 01.09.2014 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களிலிருந்து பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,

பொதுமக்கள் போன்றவரகள் வெளி இடங்களுக்கு சென்று கற்றல்கள், மற்றும் அன்றாடத்தேவைகளை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இங்கு பல பேரூந்து  சேவைகள் காணப்பட்ட போதிலும் உரிய நேரங்களில் சேவையை மேற்கொள்ளாமையாலும்,பாடசாலை மாணவர்கள் கஷ்டத்தினை எதிர் நோக்கியிருந்தனர் இந்நிலையில் பட்டிப்பளைப் பிரதேச கல்விச் சமூகம்            மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் கெளரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் இப் பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் அம்பிளாந்துறையிலிருந்து புறப்பட்டு கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு  போன்றகிராமங்களின் பிரதான வீதியினுடாகச் சென்று மட்டக்களப்பு பேரூந்துதரிப்பிடத்தை சென்றடையும்.