செங்கலடி- வேப்பையடி ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிசேக பெருஞ்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபனம்.

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு செங்கலடி வேப்பையடி ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிசேக பெருஞ்சாந்திப் பெருவிழா எதிர்வரும் சர்வமங்கள ஜய வருடம் ஆவணித் திங்கள் 20ம் நாள் (05.09.2014) வெள்ளிக்கிழமை காலை 7.35மணி-9.05மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 7.35மணி-9.05மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு மறு நாள் சனிக்கிழமை(06.09.2014) காலை 7மணிமுதல் மாலை 5மணிவரை எண்ணெய்க் காப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.அதனை தொடர்ந்து 

சர்வமங்கள ஜய வருடம் ஆவணித் திங்கள் 22ம் நாள் (07.09.2014) ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரமும் திரயோதசி திதியும் அமிர்த யோகமும் கூடிய காலை 6.02மணி முதல் 6.38மணி வரையுள்ள சிங்க லக்ண சுப முகூர்த்த வேளையில் ஸ்ரீ சக்தி விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிசேகம் நடைபெறும் என்பதுடன் தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிசேகமும் நடைபெறவுள்ளது.

அனைவரையும் இறையருள் கொண்டு அழைக்கின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்.