களுவாஞ்சிக்குடி - பொலிஸ் சார்ஜன்ட் கைது: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என சந்தேகம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்புக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் சார்ஜன்ட் கிரான்குளம் வாசியான கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இவர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு இவர் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர் பல வருடங்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இணைந்திருந்தார் என்றும் பல குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டிருப்பதான தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவரது மகனும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கப் போராளியாக இருந்து மரணித்துள்ளார் என்ற தகவலின் பின்னணியிலும் விசாரணைகள் இடம்பெறுவதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.