சமுர்த்திப் பயனாளிகளுக்கு விசேட கடன் வழங்கும் திட்டம்

(சிவம்)

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சமுர்த்திப் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) புளியந்தீவு சமூர்த்தி வங்கிக் கிளையில் இடம்பெற்றது.

திவி நெகும சஹன அருண திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூபா 5,000 முதல் ரூபாய் 50,000 வரை 4 வீத வட்டியுடன் ஒருவருடத்தின் பின்பு 24 தவணைகளில் செலுத்தமுடியும்.


இக்கடன் மட்டக்களப்பில் புளியந்தீவு, கல்லடி, இருதயபுரம் கிழக்கு மற்றும் இருதயபுரம் ஆகிய சமுர்த்தி வங்கிகளில் ரூபா 4.2 மில்லியன் 250 பேருக்கு வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. தவராஜா, புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே. நவரஞ்சன், முகாமைத்துவப் பணிப்பாளர் கே. நிர்மலதா மற்றும் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் வா. கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கடன்களை வழங்கி வைத்தனர்..