ஆசிரியர் ஒருவரின் அடங்காத காம இச்சையால் சீரழியும் சிறு பிஞ்சுகள் .! மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவம்

குரு குழந்தைகளை வனைந்து உருக்கொடுப்பவன் அதற்காக தன்னையே தியாகம் செய்து செயற்படுபவன்தான்  சிறந்த குரு ஆவான் . முற்காலத்தவர்கள் குருவுக்கு தனி மரியாதை கொடுத்தார்கள் ஆனால் இன்று மாணவர்களே மதிக்காமல் தங்களின் செயல்களால் மிதிக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? பொறுப்பு அந்தந்த ஆசிரியர்களே.

பெற்றெடுத்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஒவ்வொரு துறைகளில் பெற்றெடுக்க பாடசாலையை நம்பி அனுப்பும் போது  பிள்ளைகளையே இன்னொரு பிள்ளையை பெற்றெடுக்க வைக்கும் சீர்கெட்ட
ஆசிரியர்களை கண்டு ஆச்சரியப்படவே முடிகின்றது. இன்று ஒரு சில ஆசிரியர்களுக்கு மாணவர்களை சீருடையில் காணும் போது பரத்தையர்களை காண்பது போல் தெரிகின்றதோ என்னவோ . இவர்களின் காமத்தை தீர்ப்பதற்கு பாலகர் முதல் பெரியோர் வரை பயன்படுத்துகின்றார்கள். கேவலம் என்னவென்றால் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்களே அதிகமாக இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

 சட்டத்துறையில் உள்ள சிலர் பணத்திற்காக துணை நிற்கிறார்கள் இதுவெல்லாம்  எவ்வளவு மோசமான செயலாக காணப்படுகின்றது.
எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ விதமான கோணங்களில் நடப்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியரொருவரால் கிட்டத்தட்ட மூன்றிற்கு மேற்பட்ட மாணவிகள் துஷ;பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாசிரியர் சமாதான நீதவானாகவும்  கோயில் தலைவராகவும் இணக்கசபை உறுப்பினராகவும் செயற்படுகின்றார் என்று அறிய முடிகின்றது அத்தோடு அதே பாடசாலையில் அவ்வாசிரியரின் மகளும் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 இப்படி காமவெறி பிடித்த ஆசிரியருக்கு கல்வி வலயம் கொடுத்த தண்டனை இடமாற்றம் மட்டும்தான்.

பொலிஸ் அதிகாரிகள் கைது செய்து கொடுத்த தண்டனை பிணையில் விடுவித்தது மட்டும்தான். இப்படிப்பட்ட  தண்டனைகள் இன்னும் அனேகரைக் குற்றம் செய்யவே தூண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நேற்று இவரை மீண்டும் பொலிசார்  கைது செய்துள்ளனர்

 ' தண்டனைகள் ஒருவனை அழிப்பதற்கல்ல அவனை வாழ்நாள் முழுவதும் வருந்த வைப்பதற்காகவே '

 என் .எஸ். எஸ்