மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

 களுவாஞ்சிகுடி மகிழூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்னொருவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று  (17) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை   காலை மகிழூர் - கண்ணகிபுரம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாயான தங்கராசா கோமதி (43வயது) என்ற பெண்ணின் சடலம் மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் களுவாஞ்சிகுடி அதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம், பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.