வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு !

திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மகா வித்தியாலய வீதியிலுள்ள வீட்டிலிருந்து, 4 கைக்குண்டுகள் மற்றும் 2 துப்பாக்கி மகஸீன்கள் என்பன இன்று(30) பகல் மீட்கப்பட்டதாக, திருக்கோவில் வலய இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் வீரசிங்க தெரிவித்தார்.

வீட்டு உரிமையாளர்களிடமிருந்து தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த வீடானது, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முகாமாக முன்பு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.