போரதிவுப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற திவிநெகும 6 ஆம் கட்ட வேலைத்திட்டம்


மட்டக்களப்பு மாவட்டம், போரதிவுப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்று “ நிறைவான இல்லம், வளமான தாயகம்”  எனும் தொணிப் பொருளில்  திவிநெகும 6 ஆம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.


இதன்போது பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ் குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஞா.ருத்திரமலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் குணசேகரம்,  கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உதயகுமார், தும்பங்கேணி கால் நடை வைத்திய அதிகாரி, திவி நெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உதயகுமார், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.