கொக்கட்டிச்சோலை வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவும் சிறுவர் தின நிகழ்வும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இ.கி.மி.வித்தியாலயமானது 1937.10.01ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று(01) 77வருடங்கள் நிறைவு பெறும் இத்தினத்தில் பாடசாலை மாணவர்கள் தங்கள் வகுப்பைறைகளை அலங்கரித்து அதிபர், ஆசிரியர்களை வரவேற்று தங்கள் பாடசாலையின் ஆண்டுக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் சர்வதேச சிறுவர்தினமான இன்று உலகலாவிய ரீதியில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறுகின்றது. அதேபோன்று கொக்கட்டிச்சோலை வித்தியாலயத்திலும் சிறுவர் தின நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.



இதன்போது அதிபர்,பிரதி அதிபர் ஆகியோரால் சிறுவர் தினம், அதன்முக்கியத்தும் பற்றி கூறப்பட்டதுடன் மாணவர்களுக்கு சிற்றூண்டிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.