மட்டக்களப்பு சந்திவெளியில் சாரதியின் கவலையீனம் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளனதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிற்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்றிருந்த வேளை சந்திவெளிப் பிரதேசத்தில் பஸ்ஸின் சாரதியின் கையில் இருந்த வானொலியின் றிமோல்ட் கீலே விழ அதை எடுக்க முயற்சித்த வேளை பஸ் பாதையை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் வேப்பை மரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
காயமடைந்தவர்கள் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிற்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்றிருந்த வேளை சந்திவெளிப் பிரதேசத்தில் பஸ்ஸின் சாரதியின் கையில் இருந்த வானொலியின் றிமோல்ட் கீலே விழ அதை எடுக்க முயற்சித்த வேளை பஸ் பாதையை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் வேப்பை மரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.