நவராத்திரி விழாவினை முன்னிட்டு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்வித்தியாலயத்தில் கோலப்போட்டி புதன்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையிலும் இந்துசமயப் பாட ஆசிரியர் கே.தேவரஞ்சனின் ஒழுங்கமைப்பிலும் நடத்தப்பட்டது.
இக்கோலப்போட்டிக்கு நடுவர்களாக குடியிருப்பு முனை சண்முகாவித்தியாலயத்தின் அதிபர் மு.இராஜகோபால் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய ஆசிரியர் இ.குணசீலன் பிரதி அதிபர் ந.வன்னியசிங்கம் ஆகியோர் நடுவர்களாக செயறந்பட்டனர்.