(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு வவுணதீவு - வலையிறவு பாலத்தருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுணதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மேற்படி வவுணதீவு பாலத்தடியில் இரண்டு மோட்டார்சைக்கில்கள் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
காயமடைந்தவர்கள் கன்னன்குடாவைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியரான தருமலிங்கம் குயலவராஜா (35வயது) என்பவரும் விளாவெட்டுவானைச்சேர்ந்த சேர்ந்த காராளசிங்கம் கரன்(24வயது) என்பவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாணைகளை வவுணதீவு பொலீஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலீஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.