வின்சென்ற் தேசிய பாடசாலையின் புதிய மாணவத் தலைவிகளுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு

(வரதன்)

வின்சென்ற் தேசிய பாடசாலையின் புதிய மாணவத் தலைவிகளுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு
 பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி- கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது

.இங்கு2014  2015ம்  ஆண்டுகளுக்கான புதிய மாணவத் தலைவிகளுக்கான சத்தியப்பிரமாணம் இடம் பெற்றதை தொடர்ந்து பாடசாலை சின்னஞ் சூட்டி அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்குப் பிரதம அதிதியாக இப் பாடசாலையின் முன்னாள் மாணவியும் மட்-போதனா வைத்தியசாலை வைத்தியருமாகிய திருமதி பிருந்தா கோமகன் கலந்துகொண்டார்.