மட்டக்களப்பில் ஜனாதிபதித் தேர்தல் வேலைகளுக்கான அலுவலகம் திறப்பு


(சிவம்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேலைகளை கவனிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திருமலை வீதி தாண்டவன்வெளியில் இன்று புதன்கிழமை (29)  திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மாநகர முதல்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட அலுவலகச் செயலாளருமான சிவகீதா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிஅமைப்பாளர்அருண் தம்பிமுத்து ,கட்சியின் மாவட்டஅமைப்பாளர் ராஜன’மயில்வாகனம்
ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதன்போது பிரதியமைச்சர் முரளிதரனின் இணைப்பளர்களாக மன்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரிவிற்கு வி. சிவகுமார்,பட்டிருப்புத் தொகுதிக்கு ரி. பேரின்பராஜா மற்றும் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரிவிற்கு எஸ். பாஸ்கரன் ஆகியோருக்கு பிரதியமைச்சர் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.