(சித்தாண்டி நித்தி) பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்ட திவிநெகும தேசிய அபிவிருத்தி ஆறாம் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாடுபூராகவும் பயன்தரு மரங்கள் மற்றும் பழமரக்கன்றுகள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டு நடப்பட்டு வருகின்றது.
திவிநெகும ஆறாம் கட்டவேலைத்திட்டத்திற்கு அமைவாக வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் பழ மரக்கன்று நடும் வைபவம் ஒன்று நடைபெற்றது. இதன்போது பாடசாலையின் அதிபர் எஸ்.மோகன் பிரதி அதிபர் என்.கோணேசராசா ஆகியோர் மரக்கன்றுகளை நடுவதையும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.