கோறளைப் பற்று தெற்கு பிரதேசசெயலகத்தினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வீதிப் பேரணி.

( சுந்தர்)

கோறளைப் பற்று தெற்குபிரதேச செயலகத்தினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் வீதிப்பேரணி ஒன்று நடைபெற்றது.

மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இன்று கிரான் பிரதான வீதியில் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து கிரான் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட சிறுவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளை வீதிநாடகம் மூலம் மட்.கல்.திகிலிவெட்டை பாடசாலை மாணவர்களால் வெளிக்கொணரப்பட்டது.

இந்நிகழ்வின் போதுபிரதேச செயலாளர் குறிப்பிடும் போது சிறுவர்களுக்கு கல்வி, பாதுகாப்பு, என்பவற்றை வழங்குவது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மேலும் எமதுபிரதேசத்தில் அதிகரித்து காணப்படுகின்ற சிறுவர் பிரச்சினைகளை மேற்படிநிழ்வுகளை நடாத்துவதன் மூலம் சிறுவர்களுடைய உரிமை பேணப்படும் என குறிப்பிட்டார்.