சர்வதேச அனர்த்த குறைப்பு தின இறுதிநாள் நிகழ்வு

(சுரேஸ்)
சர்வதேசஅனர்த்த குறைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அனர்த்த ஒத்திகைநிகழ்வுகளும் அனர்த்தமுகாமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதன் இறுதிநாள் நிகழ்வு ஐரோப்பிய ஆணைக்குழுமற்றும் சேவ்த சில்ரன ;நிறுவனத்தின் செயற்திட்டத்தை அமுல்ப்;படுத்தும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அனர்த்தகுறைப்பு தினநிகழ்வு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தாவித்தியாலயத்தின் கலை அரங்கில் மட்டக்களப்பு பிரதிகல்விப் பணிப்பாளர் சசிந்திர சிவகுமார் தலைமையில் வலயக்கல்விபணியகத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.ஜெகநாதனின் தொகுப்பில் இன்று 31 நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதமஅதிதியாக மாவட்டசெயலகத்தின் பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா கௌரவ அதிதிகளாகா சேவ் த சில்ரன் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் ஆர்.மரியாவித்தியா,அக்டர் நிறுவனத்தின் திட்டஉத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன்,கன்டிகப் இன்டர்நெசனல் அமைப்பின் திட்டமுகாமையாளர் ஆர்.ரவிகுமார் சரணியாமற்றும் மாவட்டத்தின் பிரபலபாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களும் மாணவர்களுமாகபலரும் கலந்துகொண்டனர்.
;.