செங்கலடி நகரில் கொள்ளை தொடர்பில் பெண்ணொருவர் கைது பிரதான சந்தேக நபர்கள் தலைமறைவு

செங்கலடி நகரில் தொலைத்தொடர்பு நிலையம் உடைக்கப்பட்டு கையடக்கத்தொலைபேசிகள்  திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவரை  கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கடையிலிருந்து 250,000  ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கடந்த 27ஆம் திகதி திருட்டுப்போனதாக ஏறாவூர்ப் பொலிஸில்  தொலைத்தொடர்பு நிலைய உரிமையாள ரான எஸ்.மகேந்திரன் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,  விசாரணை செய்துவந்த  நிலையில் இச்சந்தேக நபரை கைதுசெய்ததுடன், திருடப்பட்ட சில கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  சந்தேக நபரின் கணவனும் சகோதரனும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவு