குடும்ப இளம்பெண் நஞ்சருந்தி தற்கொலை

(சித்தாண்டி நித்தி) சேர்நுவர பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பூநகர் ஈச்சிலம்பற்று மூதூர்ரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பரிவாதினி (1990.04.29) என்ற குடும்ப இளம்பெண் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளதாக சேர்நுவர பொலிசார் தெரிவித்தனர். 

ரவிச்சந்திரன் பரிவாதினி (வயது 24) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்வாக தெரியவருவதாவது, உயிரிழந்துள்ள பெண் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் தனது கணவனுடன் அடிக்கடி குடும்பப்பிரச்சினை ஏற்பட்டுவது வழமையாக இருந்து வந்தபோதும் நேற்று (18) தங்களுக்குள் ஏற்பட்ட குடும்ப முறண்பாடு காரணமாக இவர் நஞ்சருந்திய நிலையில்  மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் நான்கு மாத கார்ப்பிணி என்பதும் குறிப்படத்தக்கது.

இப்பெண் நஞ்சருந்தியதை அறிந்த உறவினர் உடனே கதிரவெளி வைத்தியசாலைக்கு அனுமதித்து பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு வாழைசேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிக்கிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலன்னிறி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் பிரதேபிரிசோதனையை அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.