ஏறாவூர் சவுக்கடி கடலில் பாரியளவில் பாரை மீன்கள் பிடிபட்டுள்ளது

ஏறாவூர்- சவுக்கடி கடலில் இன்று 31.10.2014   கரை வலையில் பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இதில் பெறுமதிமிக்க கருக்குப் பாரை ரக மீன்கள் அதிகமாக சிக்கின. இவை ஒவ்வொன்றும் தலா 7 கிலோ எடையுடையது. சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகத்   தெரிவிக்கப்படுகிறது.