மண்சரிவு அனர்த்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருட்கள் சேமிப்பு


(சிவம்)

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை, மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்ச் செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) சேகரிக்கப்பட்டன.

மட்டக்களப்பு வர்த்தகர்கள், பொதுமக்கள், சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கப்படவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம். சாள்ஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. துவராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ் இன்பராஜன் , சிவில் சங்கத் தலைவர் எஸ் மாமாங்கராஜா, மட்டக்களப்பு வர்த்த கைத்தொழில் சம்மேளனத் தலைவர் எம். செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்;.