பிரசித்தி பெற்ற சித்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்

(நடனம்)
பிரசித்தி பெற்ற சித்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் மண்டூர் பாலமுனைக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் மண்டூர் பாலமுனையினைச்சேர்ந்த பிரசித்திபெற்ற சித்த ஆயர்வேத வைத்தியர் கோணாமலை நாராயணன்பிள்ளை 85 வயது இவரே கிணற்றில் இருந்த சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் அவரது வீட்டு வளவில் இருக்கும் கிணற்றிலே இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையினை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்