சந்திவெளி பாலையடித்தோணா நாக கன்னி ஆலயம் தீவைப்பு ஆலயம் முற்றாக சேதம்

மட்டக்களப்பு சந்திவெளி பாலையடித்தோணா பிரதேசத்தில் நாக கன்னி ஆலயமொன்று இனந்தெரியாக நபர்களால் தீவைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பாலையடித்தோணா கடலூர்  ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் செவ்வாய்கிழமை  இரவு  இனந்தெரியாத நபர்களால்தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 
தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேச மக்கள் ஏறாவூரப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

தீப்பற்றியதில் ஆலயம் முற்றாக எரிந்துள்ளதாகவும் பழமையும்  தொன்மையுமான  இவ் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட  சம்பவம்  இந்து  மக்களுக்கு  பெரும்  கவலையளிப்பதாக மக்கள்  விசனம்  தெரிவிக்கின்றனர். 

குறித்த ஆலயம் தொடர்பாக பிரதேசத்தில் இரு குழுக்கிடையே மோதல் நிலை காணப்பட்டதாகும் அதன் காரணமாக ஆலயத்திற்கு தீ வைக்கபட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.