தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு

மட்டு மாநகர சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் அரசடி நூலகத்தில் 'வாசிப்பதனால் மன அழுத்தத்தை குறைக்கலாம்' எனும் தலைப்பில் மாகாஜன கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மட்-கோவில்குளம் விநாயகர் வித்தியாலய அதிபர் கமல்நாதன் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டார். 

மேலும் மட்டிக்கழி வாசிகசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிகசாலைக்கு வருகைதரும் வாசகர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து வாசிகசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.