தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் அரசடி நூலகத்தில் 'வாசிப்பதனால் மன அழுத்தத்தை குறைக்கலாம்' எனும் தலைப்பில் மாகாஜன கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்-கோவில்குளம் விநாயகர் வித்தியாலய அதிபர் கமல்நாதன் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டார்.
மேலும் மட்டிக்கழி வாசிகசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிகசாலைக்கு வருகைதரும் வாசகர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து வாசிகசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.